Breaking News
மத்திய பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை

மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சார் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் இருந்து ஜூன் 26-ஆம் தேதி 8 வயது சிறுமி கடத்தப்பட்டார். பள்ளியில் இருந்து சிறுமி வீடு திரும்பாத நிலையில், அப்பகுதி காவல்நிலையத்தில் அச்சிறுமியின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதையடுத்து துரிதமாக செயல்பட்ட காவல்துறை அன்றையே தினமே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், அச்சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அப்போது அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்ய முயற்சித்துள்ளது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட சிறுமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி தீவிர சிகிச்சைக்கு பின் உடல் நலம் பெற்றாள்.

இதனிடையே அச்சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய முயற்சித்த இர்ஃபான் (வயது 20) மற்றும் ஆசிப் ஆகிய இருவரை போலீசார் சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்தில் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அங்குள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த இரு மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், குற்றவாளிகள் இருவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.