Breaking News
10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியரை நிர்வாணப்படுத்தி ஊர்வலம்

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் எலுருவில் 10-ம் வகுப்பு மாணவியை ஆங்கில ஆசிரியர் ராம்பாபு என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மாணவியை கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி கர்ப்பம் அடைந்த போது, கருவை கலைப்பதற்கான மத்திரைகளையும் கொடுத்துள்ளார். சிறுமிக்கு அதிகமான இரத்த போக்கு ஏற்பட்டதை அடுத்து பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஆசிரியரை பொதுமக்கள் தாக்கி நிர்வாணப்படுத்தியுள்ளனர், இதனையடுத்து அப்படியே ஊர்வலமாக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சிறுமிக்கு தேர்வுகளில் அதிகமான மதிப்பெண்களை வழங்குவதாக ஆசைவார்த்தை கூறி ஆசிரியர் அத்துமீறியுள்ளார் என்று ஒருவர் பேசுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. குற்றவாளியை விடக்கூடாது என பொதுமக்கள் கூறியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.