Breaking News
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆணையத்தில் இன்று ஆஜர்

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் விசாரணை ஆணையத்தில் இன்று காலையில் ஆஜராக உள்ளனர்.

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி முடித்துள்ளது. ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜி.சி.கில்னாணி, அஞ்சன்டிரிகா, நிதிஷ் நாயக் ஆகியோர் நேரில் வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர். ஜெயலலிதாவுக்கு வழங்க வேண்டிய சிகிச்சைகள் குறித்து அப்போலோ மருத்துவர்களுக்கு ஆலோசனையும் வழங்கினர். அவர்கள் 3 முறை அப்போலோ மருத்துவமனை வந்தனர். டிசம்பர் 3-ம் தேதி வரை ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துவிட்டு சென்றனர். ஆனால் டிசம்பர் 4-ம் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. டிசம்பர் 5-ம் தேதி அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜி.சி.கில்னாணி, அஞ்சன்டிரிகா, நிதிஷ் நாயக் ஆகியோரை நேரில் ஆஜராகச்சொல்லி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. அந்த சம்மனை ஏற்று, எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேரும் இன்று (23-ம் தேதி) நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ளனர். நாளை 3 பேரிடமும் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்துகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.