Breaking News
அந்த தயாரிப்பாளர் என்னை படுக்கைக்கு அழைத்தார் – நடிகை பகீர் புகார்

ஒரு பிரபல தயாரிப்பாளர் சினிமா வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை பாயல் ராஜ்புட் புகார் தெரிவித்துள்ளார்.

கோலிவுட், பாலிவுட் மட்டுமல்ல. ஹாலிட்டிலும் கூட நடிகைகள் சந்திக்கும் பாலியல் தொல்லைகளை குறித்து தற்போது நடிகைகள் தைரியமாக பேச முன் வந்துள்ளனர்.

அதேபோல், நடிகை பாயல் ராஜ்புட்டும் ஒரு புகாரை தெரிவித்துள்ளார். இவர் பஞ்சாபி படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர். ஆர்.எக்ஸ் 100 என்ற தெலுங்கு படத்தில் இவர் அறிமுகமாகியுள்ளார். இந்த படம் திரைக்கு வந்து வெற்றி பெற்றுள்ளது.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் “நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் தொல்லைகள் குறித்து துணிவாக பேசிய பிறகும் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் இருக்கத்தான் செய்கிறது. எனக்கும் அதுபோன்ற அனுபவம் ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு என்னை ஒரு தயாரிப்பாளர் அழைத்து அவரது படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும், அதற்காக அவருடன் படுக்கையை பகிர வேண்டும் எனவும் கூறினார். இது கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். நான் என் திறமையால் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். உங்கள் ஆசைக்கு இணங்க மாட்டேன் என கூறிவிட்டேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.