Breaking News
வடகொரியா அணு ஆயுதங்களை ஒழிப்பது உறுதியானால் மட்டுமே பேச்சுவார்த்தை: அமெரிக்கா திட்டவட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது சந்திப்பு கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்றது.அப்போது, அணு ஆயுத சோதனை மையங்கள் விரைவில் அழிக்கப்படும் என கிம் ஜாங் அன் டிரம்ப்பிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, வடகொரியா அணு ஆயுத சோதனை மையங்களை அழித்து வந்தது.ஆனாலும், வடகொரியா அரசு தற்போதும் அணு ஆயுதங்களை சோதனைக்கு உட்படுத்தி வருகிறது என சமீபத்தில் அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இந்நிலையில், அணு ஆயுதங்களை அழிப்பது உறுதியானால் மட்டுமே வடகொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த தயாராகும் என அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து போம்பியா கூறியதாவது:, சிங்கப்பூரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் ஒப்புக்கொண்ட படி, வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், அணு ஆயுதங்களை அழிக்க தயாரானால் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது” என்றார்.

அதேவேளையில், கிம் ஜாங் அன்னின் உதவியாளர் மிகவும் கடுமையான வார்த்தைகளால் எழுதிய கடிதத்துக்கு பிறகே, அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் போம்பியோவின் வடகொரியா பயணத்தை ரத்து செய்யுமாறு டொனால்டு டிரம்ப் கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து கேட்ட போது, போம்பியாவின் செய்தி தொடர்பாளர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.