Breaking News
வங்கிகளுக்கு 6 நாட்கள் விடுமுறையா? நிதி அமைச்சகம் விளக்கம்

செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்றும், இதனால் ஏ.டி.எம். உள்பட வங்கி சேவைகள் அனைத்தும் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது.

அதாவது 2-ந்தேதி (நாளை) முதல் 5-ந்தேதி வரையிலும், அதன் பின்னர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளிலும் வங்கிகள் இயங்காது என அந்த தகவல்கள் பரவின.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:-

செப்டம்பர் 2 (ஞாயிற்றுக்கிழமை) வங்கிகளுக்கான வழக்கமான விடுமுறை நாள். செப்டம்பர் 3 (திங்கட்கிழமை) ஜன்மாஷ்டமி விடுமுறை ஆகும். ஆனால் அனைத்து மாநிலங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தாது. குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டுமே விடுமுறை தரப்படுகிறது.

அதன் பின்னர் செப்டம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் (செவ்வாய் மற்றும் புதன்) மத்திய ரிசர்வ் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இருந்த போதிலும் இந்த போராட்டம் எந்த வகையிலும் வங்கி சேவைகளை பாதிக்காது.

அதே போல் செப்டம்பர் 8, 2-வது சனிக்கிழமை என்பதாலும், செப்டம்பர் 9 ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் அன்றைய தினங்கள் வழக்கமான விடுமுறையாகிறது. எனினும் அந்த நாட்களில் அனைத்து மாநிலங்களிலும் ஏ.டி.எம்.கள் முழுமையாக இயங்கும். இணைய பரிமாற்றங்களிலும் பாதிப்பு இருக்காது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.