Breaking News
ஏரியில் விழுந்த விமானம் சூடானில் 21 பேர் பலி

சூடான் நாட்டில், ஏரியில் விமானம் விழுந்ததில், ௨௧ பேர் உயிரிழந்தனர்.

வடக்கு ஆப்ரிக்காவில் உள்ள, சூடான் நாட்டின் தலைநகரான ஜுபா நகரில் இருந்து, சிறிய ரக விமானம், ஈரோல் என்ற நகருக்கு, நேற்று புறப்பட்டு சென்றது. புறப்பட்ட சில மணி நேரத்தில், விமானத்தில் கோளாறு ஏற்பட்டு, ஏரியில் விழுந்தது. இந்த விபத்தில், 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பலத்த காயடைந்த நிலையில் மீட்கப்பட்ட, 6 வயது குழந்தை மற்றும் இருவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து, விசாரணை நடந்து வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.