Breaking News
டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்

டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் மீரட்டிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கார்காவ்டா பகுதியை மையமாக கொண்டு நிகழ்ந்ததாக அமெரிக்க புவிசார்மையம் தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று மாலை தலைநகர் டெல்லியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தை உணர்ந்தவர்கள் தங்களுடைய சமூக வலைதளங்களில் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.