Breaking News
அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் மு.க அழகிரி சந்திப்பு

கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜுவின் தாயார் கே.ஓச்சம்மாள் (90). அண்மையில் காலமானார். இந்த நிலையில், இன்று காலை அமைச்சர் செல்லூர் ராஜூ இல்லத்திற்கு சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி, செல்லூர் ராஜூவின் தாயார் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதோடு, அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

சிறிது நேரம் செல்லூர் ராஜுவிடம் பேசிக்கொண்டு இருந்த மு.க அழகிரி, பின்னர் அங்கிருந்து கிளம்பிச்சென்றார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மு.க அழகிரி, நீங்கள் நினைப்பது போல் எதுவும் இல்லை. செல்லூர் ராஜூவின் தாயார் மறைவுக்கு துக்கம் விசாரிக்கவே வந்தேன்” என கூறிவிட்டு சென்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.