Breaking News
எச் ராஜாவை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கும்முடிப்பூண்டியில்  பேட்டி

காவல்துறையினரை நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக பேசிய
பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன்
கும்முடிப்பூண்டியில் பேட்டி

திருவள்ளூர் மாவட்டம் கும்முடிப்பூண்டி அருகே உள்ள கவரைப்பேட்டையில் கட்சி பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் திமுக மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேணு உள்ளிட்டோருடன் மணமக்களை வாழ்த்தி பேசினார் . அப்போது திமுகவிற்கும் கலைஞருக்கும் நன்றிகடன் பட்டவர்கள் விடுதலைசிறுத்தைகள் என்றார் .பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் பாண்டிச்சேரி அரசு கட்சி துணைபொதுசெயலாளரான துரை ரவிக்குமாருக்கு துப்பாக்கி பாதுகாப்புவழங்கியது போல தமிழக அரசும் வழங்கவேண்டும்என தெரிவித்தார் தற்போது சிறையில் சொகுசு வசதிகளை செய்து கொடுப்பது குறித்து சிறைத்துறையினர் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் .இலங்கை படுகொலை காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு தான் நிகழ்த்தியது என ராஜபக்சே.கூறுவது உண்மை தான் அது வருந்ததக்கது தான் ஆனால் மதவாத சக்தியான பாஜகவை ஒழிக்க காங்கிரஸ் திமுக உள்ளிட்ட மதசார்பாற்ற ஆட்சி அமைய கூட்டணியாக காங்கிரஸ் திமுகவுடன்
இந்த கூட்டணி அவசியம் என்று தெரிவித்தார்.
பேரறிவாளன் சாந்தன் முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் அதிகாரம்
ஆளுநருக்கே உள்ளது உடனடியாகவிடுவிக்கப்படவேண்டும
என தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.