Breaking News
போப்பாண்டவருக்கு பலாத்கார பிஷப் கடிதம்

கேரளாவில் பிஷப் மீது கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பாகி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தனக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி சமீபத்தில், போப்பாண்டவருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில் தற்போது பாலியல் புகாருக்கு உள்ளான பிஷப் முல்லக்கலும் போப்பாண்டவருக்கு கடிதம் எழுதி உள்ளார். பிஷப் பிரான்கோ முல்லக்கல் எழுதி உள்ள கடிதத்தில், தற்காலிகமாக எனது மறைமாவட்ட பொறுப்புகளில் இருந்து விலக விரும்புகிறேன். இதற்காக தங்களின் அனுமதியை கோருகிறேன். என் மீதான குற்றச்சாட்டு விவகாரத்தில் நான் போராட நீண்ட காலம் தேவைப்படும். இதற்காக நான் கேரளா செல்ல உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
தனது பொறுப்புக்களில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை போப்பாண்டவருக்கான பிரதிநிதியிடம் அவர் ஒப்படைத்துள்ளார். போப்பாண்டவரிடம் முறையாக அனுமதி வந்த பிறகு மல்லக்கல் தனது பொறுப்புக்களில் இருந்து விலகுவார் என ஜலந்தர் மறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.