Breaking News
எந்த நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுகிறது?: உண்மையை சொன்ன அனுபமா

திரையுலகில் பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிரேமம் படம் மூலம் நடிகையானவர் அனுபமா பரமேஸ்வரன். தனுஷின் கொடி படம் மூலம் கோலிவுட் வந்தார். தற்போது அவர் தெலுங்கு, மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது பற்றி பேசியுள்ளார்.

சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது குறித்து தற்போது ஒவ்வொரு நடிகையாக துணிச்சலாக பேசத் துவங்கியுள்ளனர். ஹாலிவுட் பிரபலங்கள் தைரியமாக பேசத் துவங்கியதை பார்த்து இங்குள்ள பிரபலங்களும் பேசுகிறார்கள். ஆனால் பேசினால் கெரியர் பாதிக்கப்படுமோ என்ற பயத்தில் பலர் வாய் திறப்பது இல்லை.

சினிமா துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது உண்மையே. அதை நான் மறுக்கவில்லை. ஆனால் இதுவரை எனக்கு யாரும் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் வரும் புதுமுக நடிகைகளுக்கு தான் பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுகிறது என்று அனுபமா தெரிவித்துள்ளார்.

பாலியல் தொல்லை அளித்தால் அதை எதிர்க்காமல் ஏற்கும் மனநிலை உள்ள வரை அதை தடுக்க முடியாது என்று நினைக்கிறேன். என்னை சுற்றி நல்லவர்கள் உள்ளனர். என் மீது அன்பும், மரியாதையும் வைத்துள்ளனர். அவர்கள் இருக்கும் வரை எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அழகு என்பது மாடர்னாக இருப்பதிலோ, குட்டை பாவாடை அணிவதிலோ இல்லை. திறமையான நடிப்பை வெளிப்படுத்துவதில் தான் உள்ளது என்கிறார் அனுபமா.

சினிமா துறையில் பாலியல் தொல்லை கொடுப்பவர்களின் பெயர்களை நடிகை ஸ்ரீ ரெட்டி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பிறகு பேட்டி அளிக்கும் பல நடிகைகள் எங்களுக்கு யாரும் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை என்று தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தான் அனுபமா பரமேஸ்வரனும் அதையே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.