Breaking News
ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் தகாத முறையில் நடந்து கொண்ட நடிகர்!

லிப்டில் தனக்கு நடிகர் ஒருவர் தொல்லை கொடுத்ததாக, ராதிகா ஆப்தே புகார் தெரிவித்தார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராதிகா ஆப்தே. இவர் தமிழில் ரஜினி ஜோடியாக கபாலி, கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா, தோனி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தன்னிடம் ஒரு நடிகர் லிப்டில் தகாத முறையில் நடந்து கொண்டதாக ராதிகா ஆப்தே தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

சமீபத்தில் நான் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தபோது எனது முதுகில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்தேன். படப்பிடிப்பு முடிந்த பிறகு நான் தங்கி இருந்த ஓட்டலுக்கு திரும்பினேன். எனது அறைக்கு செல்வதற்காக ஓட்டல் லிப்டில் ஏறினேன்.

அதே லிப்டில் என்னுடன் நடித்த நடிகரும் வந்தார். நாங்கள் இருவர் மட்டுமே லிப்டில் இருந்தோம். சேர்ந்து நடித்தாலும் அவரோடு நான் பேசியது இல்லை. அந்த நடிகர் லிப்டுக்குள் திடீரென்று என்னிடம் அத்துமீறி பேசினார். உங்களுக்கு நள்ளிரவில் ஏதேனும் உதவி தேவை என்றால் என்னிடம் சொல்லுங்கள். நான் வந்து உங்கள் முதுகை தடவி விடுகிறேன் என்றார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். அந்த நடிகரை பற்றி தயாரிப்பாளரிடம் புகார் செய்தேன். பிறகு அந்த நடிகர் என்னிடம் மன்னிப்பு கேட்டார்.” இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.

முன்னதாக தென்னிந்திய மொழி படமொங்களில் நடித்த போது அந்த படத்தின் கதாநாயகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக ராதிகா ஆப்தே குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக சில வாரங்களுக்கு முன்பு ராதிகா ஆப்தே அளித்த பேட்டியில், படப்பிடிப்பில் முதல் நாளே அந்த நடிகர் என்னிடம் சில்மிஷங்கள் செய்தார். எனது பாதங்களை வருடினார். இதனால் கோபத்தில் அவரை அறைந்து விட்டேன். செருப்பையும் காட்டினேன் என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.