Breaking News
ஐஸ்வர்யாவை டைட்டில் வின்னராக்க பிக்பாஸ் போட்டுள்ள தில்லாலங்கடி பிளான்

பிக்பாஸ் 2 தற்பொழுது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்றைய எவிக்‌ஷனில் பாலாஜியும், யாஷிகாவும் வெளியேற்றப்பட்டனர். பிக்பாஸ் வீட்டில் ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி, ஐஸ்வர்யா ஆகியோர் இருக்கின்றனர்.

பிக்பாஸின் செல்லப்பிள்ளையான ஐஸ்வர்யாவை பிக்பாஸ் முதலிலிருந்தே காப்பாற்ற பல தில்லாலங்கடி வேலைகளை செய்துள்ளது. ஐஸ்வர்யா எவ்வளவு தான் மட்டமாக நடந்து கொண்டிருந்தாலும் கூட பிக்பாஸ் ஐஸ்வர்யாவை விட்டுக்கொடுக்காமல் இருந்தது. இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் செம கடுப்பிற்கு ஆளாகினர்.

பிக்பாஸ் ஐஸ்வர்யாவை டைட்டில் வின்னராக்க வேண்டும் என்று தான் இதையெல்லாம் பிளான் போட்டு செய்து வந்துள்ளது. எப்படி என்று கேட்கிறீர்களா?

தற்பொழுது ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி, ஐஸ்வர்யா ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருக்கினறனர். அதில் ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி ஆகியோர் மட்டுமே தமிழ் பெண்கள். தமிழர்கள் மட்டுமே அவர்களுக்கு ஓட்டு போடுவார்கள். ஆனால் ஐஸ்வர்யா வடமாநிலத்துப் பெண். அவருக்கு தமிழர்கள் அல்லாது வடமாநிலத்தவர்களும் ஓட்டு போடுவார்கள். இதனால் ஐஸ்வர்யா கணிசமான ஓட்டுகளைப் பெற்று பிக்பாஸ் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார். இது கண்டிப்பாக நடக்கும்…

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.