Breaking News
கோவில்பட்டி அருகே புதிய பேருந்து நிறுத்தம் திறப்பு அமைச்சர் பங்கேற்பு

கயத்தார் நகரின் மையப்பகுதியில் பயணிகளின் வசதிக்காக புதிய பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் மாண்புமிகு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.. மக்களின் கோரிக்கையை ஏற்று கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சுமார் 7 லட்ச ரூபாய் செலவில் கயத்தார் நகரின் மையப்பகுதியில் பேருந்து பயணிகளின் வசதிக்காக புதிய பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.. இந்த புதிய பேருந்து நிறுத்தம் தொடக்க விழா இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.. கோட்டாட்சியர் திருமதி விஜயா, கயத்தார் தாசில்தார் திரு. லிங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.. இதில் மாண்புமிகு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு புதிய பேருந்து நிறுத்ததினை திறந்து வைத்தார்..

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.