Breaking News
உத்தரபிரதேசம்: விமானப்படை விமானம் விழுந்து விபத்து

விமானப்படை தினம் 8–ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுவதை முன்னிட்டு உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஹிண்டர் விமானப்படை தளத்தில் போர் விமானிகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இலகு ரக விமானம் ஒன்றில் 2 விமானிகள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த விமானம் பாக்பட் மாவட்டத்தில் சென்ற போது திடீரென அங்குள்ள வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானம் பலத்த சேதமடைந்தது. எனினும் அதில் இருந்த 2 விமானிகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் விமானப்படை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.