Breaking News
சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும், சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு

சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன் தினம் முதல், அவ்வப்போது பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், நேற்று சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று சென்னை, காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று இரு மாவட்ட ஆட்சியர்களும் அறிவித்துள்ளனர்.
விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களின் விவரம்:

* திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் அறிவித்துள்ளார். உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் இயங்கினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

* நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

* காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

* புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* தேனி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.