Breaking News
பட்டத்தின் மாஞ்சா கயிறு கழுத்தை அறுத்ததில் பெண் டாக்டர் பலி

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருபவர் 26 வயதான கிருபலி நிகம். இவர் நேற்று மாலை 6.45 மணிக்கு மருத்துவமனையில் இருந்து சவுடாகர் பகுதியில் அமைந்துள்ள தன்னுடைய வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.
நாசிக பாடா பகுதியை அடையும் போது பட்டம் விட பயன்படுத்தப்படும், மாஞ்சா கயிறு கழுத்தில் சிக்கி அறுத்துள்ளது. இதில் நிலைகுலைந்த கிருபாலி நடுவீதியிலேயே சுருண்டு விழுந்துள்ளார். ரத்த வெள்ளத்தில் இளம்பெண் ஒருவர் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தற்போது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், பட்டம் விட்டவர்கள் குறித்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.