Breaking News
சென்னை செம்பியம் காவல்நிலையத்தில் சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டறை திறப்பு

சென்னை செம்பியம் காவல்நிலையத்தில் சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டறை திறப்பு.

சென்னை செம்பியம் காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறையை வடக்கு மண்டலக் கூடுதல் ஆணையர் தினகரன் திறந்து வைத்தார். சென்னை செம்பியம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 350 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தக் கேமராக்களில் படம்பிடிக்கப்படும் காட்சிகளைப் பதிவு செய்யவும், பார்வையிடவும் உதவும் கட்டுப்பாட்டறை செம்பியம் காவல்நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மாநகரக் காவல் வடக்கு மண்டலக் கூடுதல் ஆணையர் தினகரன் இந்தக் கட்டுப்பாட்டறையைத் திறந்து வைத்தார்.
அதன்பின் பேசிய அவர், மேற்கு, வடக்கு மண்டலங்களில் இருபதாயிரத்துக்கு மேற்பட்ட கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.