Breaking News
நெல்உமி  மூட்டைகளை அடுக்கி மறைத்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட பத்து லட்சம் ரூபாய் செம்மரக்கட்டைகளை கவரைப்பேட்டை காவல்துறையினர்  அதிகாலை நடத்திய வாகன சோதனையில்  பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து வெட்டி கர்நாடக பதிவெண் கொண்ட மினிவேனில் நெல்உமி மூட்டைகளை அடுக்கி மறைத்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட பத்து லட்சம் ரூபாய் செம்மரக்கட்டைகளை கவரைப்பேட்டை காவல்துறையினர் அதிகாலை நடத்திய வாகன சோதனையில் பறிமுதல் செய்தனர்.
அப்போது போலீசாரிடம் பிடிபடாமல் மினி வேன் ஓட்டுநர் தப்பிசென்றார்.

திருவள்ளூர் மாவட்டம் புதுவாயல் கூட்டு சாலையில் போலீசார் வாகன சோதனையின் போது அதிகாலை வந்த மினி வேனில் கடத்திவந்த பத்துலட்சம் மதிப்புள்ள சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகளை வாகன தணிக்கை செய்த போலீசார் கர்நாடக பதிவெண் கொண்ட.மினிவேனில் நெல் உமி மூட்டைகளை அடுக்கி செம்மரக்கட்டைகளை மறைத்து இருந்ததை பறிமுதல்செய்தனர் .அப்போது போலீசாரிடம் பிடிபடாமல்மினிவேனின் ஓட்டுநர் இருட்டில் தப்பி யோட்டம் எடுத்தார். பின்னர்
கவரைப்பேட்டை போலீசார் பத்துலட்சம் மதிப்புமிக்க முதல் தர செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து அதனை மேல் விசாரணைக்காக மாதர்பாக்கத்தில்உள்ள கும்முடிப்பூண்டி வனச்சரக அலுவலகத்தில் வனதுறை அதிகாரி மாணிக்க வாசம் வசம் ஒப்படைத்தனர் . விசாரணை

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.