Breaking News
ஆளுநர் மாளிகைக்கு வரும் சால்வை, பரிசுப்பொருட்களும் கூட ஏழை மக்களுக்கு அளிக்கப்படுகிறது – கிரண்பேடி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்-மந்திரி நாராயணசாமி இடையேயான கருத்து மோதல் மீண்டும் முற்றி உள்ளது.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, தனியார் பள்ளியிலிருந்து பெறப்பட்ட ரூ.7 லட்சம் சிஎஸ்ஆர் நிதி என்ன ஆனது? துணைநிலை கவர்னர் கிரண்பேடி, சிஎஸ்ஆர் திட்டத்தின் மூலம் பணம் வசூல் செய்து அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார் என குற்றம்சாட்டினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியிருப்பதாவது:

ஆளுநர் மாளிகை பொதுமக்களுக்கு சேவை செய்யும் ஒரு மையமாக உள்ளது. இதுவரை யாரிடமும் பணமோ, பொருட்களோ பெறப்படவில்லை. ஆளுநர் மாளிகைக்கு வரும் சால்வை, பரிசுப்பொருட்களும் கூட ஏழை மக்களுக்கு அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.