Breaking News
பெண்கள் கரும்பல்ல இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது; தமிழிசை சவுந்தரராஜன்

நடிகை தனுஸ்ரீ தத்தா இந்தி திரைப்பட நடிகர் நானா படேகர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு எழுப்பினார். இதனையடுத்து பாலிவுட்டில் மீடூ விவகாரம் பரபரப்பினை ஏற்படுத்தியது.

தொடர்ந்து பிரபல நடிகர் ஆலோக் நாத், விகாஸ் பஹால் போன்றவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.

இந்த மீடூ விவகாரம் தமிழ் திரையுலகிலும் சூடு பிடிக்க தொடங்கியது. இந்த நிலையில், மீடூ விவகாரத்தில் பாலியல் துன்புறுத்தல்களை பெண்கள் தெரிவித்து வருவது பற்றி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! என தெரிவித்துள்ளார்.

இதேபோன்று சபரிமலை கோயில் ஐதீகத்தை மாற்றக்கூடாது என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளதை வரவேற்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.