Breaking News
மெஸ்சிக்கு எலும்பு முறிவு 3 வாரங்கள் விளையாட முடியாது

அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனான லயோனல் மெஸ்சி, ஸ்பெயினைச் சேர்ந்த பார்சிலோனா கிளப்புக்காக விளையாடி வருகிறார். லாலிகா கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் சிவில்லா அணிக்கு எதிரான ஆட்டத்தில் களம் கண்ட மெஸ்சி 12-வது நிமிடத்தில் கோல் அடித்தார். 26-வது நிமிடத்தில் அவரை எதிரணி வீரர் பிராங்கோ வஸ்கியூஸ் லேசாக தள்ளிவிட்டதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். வலது கை மைதானத்தில் பலமாக இடித்தது. வலியால் துடித்த அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். பரிசோதனையில், முழங்கைக்கு சற்று கீழே எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அவரால் 3 வாரங்களுக்கு விளையாட முடியாது என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி அடுத்த 6 ஆட்டங்களை அவர் தவற விடுகிறார். இதற்கிடையே அந்த ஆட்டத்தில் பார்சிலோனா 4-2 என்ற கோல் கணக்கில் சிவில்லா அணியை வீழ்த்தியது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.