Breaking News
காஞ்சீபுரத்தில் நாட்டு வெடிகள் வெடித்து சிதறியதில் 3 பேர் உயிரிழப்பு

காஞ்சீபுரத்தில் நாகலு தெருவில் தீபாவளிக்கு விற்பனை செய்வதற்கு பட்டாசுக்கள் வாங்கி குவிக்கப்பட்டிருந்த வீட்டில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த நாட்டு வெடிகள் வெடித்து சிதறியதில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர் என தகவல் தெரிவித்துள்ளது. தீ விபத்து தொடர்பாக தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். இதற்கிடையே நாட்டு வெடிகள் தாயாரிக்கப்பட்ட போது வெடிவிபத்து நேரிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வீடு பலத்த சேதம் அடைந்துள்ளது. அங்கிருந்த வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவரது உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது.
வெடிகள் வெடித்து சிதறியபோது அப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது போன்று உணர்ந்ததாக பொதுமக்கள் கூறுகிறார்கள். அனுமதியில்லாமல் இதுபோன்று பலர் தீபாவளி சீட்டு நடத்தி வெடிகளையும் வாங்கி குவிக்கிறார்கள் என குற்றம் சாட்டப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.