Breaking News
சுசி கணேசனும் அவர் மனைவியும் போன் மிரட்டல் விடுத்தனர் – அமலா பால் பகீர்

இயக்குனர் சுசி கணேசனும், அவரது மனைவியும் தனக்கு போன் செய்து திட்டியதாக நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சுசி கணேசன் 13 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இயக்குனர் லீனா மணிமேகலை தெரிவித்தார். அவருக்கு நடிகை அமலா பால் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் சுசி கணேசன் தனக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக அமலா கூறினார்.

அமலா லீனாவுக்கு ஆதரவு தெரிவித்ததை பார்த்த சுசி கணேசன் அவருக்கு போன் செய்து திட்டியுள்ளார். லீனா மணிமேகலை பொய் சொல்கிறார் என்று சுசி கணேசன் கூறி வந்த நிலையில் முன்னணி நடிகையான அமலா பால் பாலியல் புகார் தெரிவித்துள்ளதால் அனைவரின் கவனமும் இந்த விவகாரம் பக்கம் திரும்பியுள்ளது.

அமலா பால் இது பற்றி கூறியதாவது : “இயக்குனர் சுசி கணேசன் மற்றும் அவரின் மனைவி மஞ்சரி எனக்கு போன் செய்தார்கள். என் நிலையை விளக்கலாம் என்று நினைத்து போனை எடுத்தேன். அவரின் மனைவியை சமாதானம் செய்ய முயன்றபோது சுசி என்னை திட்டத் துவங்கினார். அவரின் மனைவியோ அதை கேட்டு சிரித்தார். இருவரும் சேர்ந்து என்னை பற்றி கேவலமாக பேசினார்கள். இது போன்று செய்து என்னை பயமுறுத்தலாம் என்று நினைக்கிறார்” என அமலா பால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழின் முன்னணி நடிகையாக இருக்கும் அமலா பாலை இயக்குனர் சுசி கணேசன் மிரட்டிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீ டூ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.