Breaking News
1500 லிட்டர் வெள்ளை நிற மண்ணெண்ணெய் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது     வாகனமும் மண்ணெண்ணையும் பறிமுதல்

?வருவாய்த்துறை பறக்கும்படை ?
24-10-2018 மாலை சுமார் 07 மணியளவில் துணை வட்டாட்சியர் கே.முருகன தலைமையில், தனி வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், ஓட்டுனர் டேவிட் ஆகியோர் கொண்ட குழு சின்னத்துறை to வள்ளவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இடவிளாகம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வந்த KL-31B-8937 எண் கொண்ட பிக்கப் வாகனம் ஒன்றினை சைகைக்காட்டி நிறுத்த முயன்றபோது பிக்கப் வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது வாகனத்தை துரத்திச் சென்று வள்ளவிளை பகுதியில் வாகனத்தை மடக்கி பிடித்ததும் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி விட்டு ஓடிவிட்டார் வாகனத்தை சோதனை செய்தபோது அதில் சுமார் 1500 லிட்டர் வெள்ளை நிற மண்ணெண்ணெய் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது வாகனமும் மண்ணெண்ணையும் பறிமுதல் செய்து மண்ணெண்ணையினை இனயம் அரசு கிட்டங்கியிலும், வாகனத்தை கல்குளம் வட்டாட்சியர் அலுவலகதிலும் ஒப்படைக்கப்பட்டது மண்ணெண்ணையினை கேரளாவுக்கு கடத்தி செல்ல கொண்டு வந்ததாக தெரிகிறது மேலும் ஓட்டி வந்த நபர் யார் என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது வாகனமாது ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டு கொல்லத் தை சேர்ந்த ஷிபு என்பவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.