Breaking News

நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் அளித்த ஸ்ருதி ஹரிகரனின் ரகசியம் தற்பொழுது அம்பலமாகியிருக்கிறது.

நடிகர் அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை ஸ்ருதி ஹரிகரன் என்ற நடிகை போலீசில் பாலியல் புகார் அளித்துள்ளார். இந்த மனு அடிப்படையில் அர்ஜூன் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

இதற்கிடையே சுருதி ஹரிகரன் திருமணமாகாதவர் என திரையுலகினர் நினைத்து வந்த நிலையில் அவருக்கு ஏற்கனவே திருமணமான தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டே இந்த விஷயம் குறித்து ஸ்ருதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது தனக்கு திருமணமாகவில்லை என பொய் கூறினார். எங்கே திருமணம் ஆகிவிட்டது என கூறினால் தனக்கு மார்க்கெட் குறைந்துவிடும் என நினைத்து ஸ்ருதி பொய் கூறியிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

திருமணமான விஷயத்தையே மறைத்து பொய் கூறியிருக்கும் ஸ்ருதி அர்ஜுன் மீது கூறிய புகாரை எப்படி நம்புவது என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.