Breaking News
மீ டூ மூலம் மலையாள இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் புகார்

மீ டூ மூலம் பலரும் பாலியல் புகார் கூறி வரும் நிலையில், மலையாள இயக்குனர் ஹரிஹரன் மீது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பாலியல் புகார் கூறியுள்ளார்.

இது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறுகையில். ஹரிஹரன் இயக்கிய பழசிராஜா படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். சின்ன வேடம் என்றபோதிலும், மம்மூட்டிக்கு மனைவி என்பதால் பூஜையிலும் கலந்து கொண்டேன்.

அதன் பிறகு, திருவனந்தபுரத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றேன். அப்போது இயக்குனர் ஹரிஹரனிடம் என்னை மாலையில் சந்தித்த வேண்டும் என்று கூறினார். நான் முடியாது என்றேன். ஆனால் அவர் என்னை பார்க்கவே வந்திருப்பதாக கூறி, கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்றார்.

நான் மாலையில், சென்னை திரும்ப வேண்டும் என்று கூறினேன். ஆனால் இயக்குனர் ஹரிஹரன், அதெல்லாம் முடியாது உங்களை பார்க்கதான் நான் இங்கு வந்தேன் என்றும், கண்டிப்பாக இருங்கள் என்றும் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த நான், கடுமையாக திட்டிவிட்டு சென்னை திரும்பிவிட்டேன்.

இப்போது, அவரைப் பற்றி வெளியில் சொன்னதும், அப்படியெல்லாம் சொல்லாதீங்க. அவர் பெரிய ஆள் என்று சொல்றாங்க. அவ்வளவு பெரிய ஆளாக இருந்தால் ஏன் அப்படியெல்லாம் செய்றாங்க. அன்றைக்கு எனக்குரிய வாய்ப்பு பறி போன போது யாரும் வரவில்லை. அதோடு, அப்படி வாய்ப்பு பறிபோனதால் தான் இப்போது நான் பேசுகிறேன் என்று கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.