Breaking News
கஜா புயல் நகர்ந்து வரும் வேகம் மணிக்கு 23 கி.மீட்டராக உயர்வு : வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது.

கடந்த 3 நாட்களாக கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த ‘கஜா’ புயல் இன்று (வியாழக்கிழமை) நிலப்பகுதியை நோக்கி வருகிறது. இந்த புயலானது பாம்பன் கடலூர் இடையே நாகை அருகே இன்று மாலை அல்லது இரவு கரையைக்கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஜ புயல் மணிக்கு 14 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்த நிலையில், 23 கி. மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது நாகைக்கு அருகே 338 கி.மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு அருகே 328 கி.மீட்டர் வேகத்திலும் புயல் மையம் கொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.