Breaking News
ஜம்மு காஷ்மீர்: நவீத் ஜாட் உள்ளிட்ட 2 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் பத்காம் மாவட்டத்தில் உள்ள குத்போரா கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை இன்று காலையில் சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த சண்டையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி நவீத் ஜாட் உள்ளிட்ட 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். காஷ்மீரின் மூத்தப் பத்திரிகையாளர் சுஜாத் புஹாரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நவீத் ஜாட் பாகிஸ்தானைச் சேர்ந்தவன். கடந்த பிப்ரவரி மாதம் 6-ம் தேதி ஸ்ரீநகர் மருத்துவமனையில் இருந்து போலீஸ் காவலையும் மீறி தப்பிச் சென்றான். அவனை போலீசார் தேடி வந்த நிலையில், இன்று நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளான்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.