Breaking News
அடிலெய்டு டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்தியா 250 ரன்களுக்கு ஆல் அவுட்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி தயக்கமின்றி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. கேப்டன் விராட் கோலி (3 ரன்கள்) உட்பட முன்னணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை தாரைவார்த்தனர்.

புஜாரா மட்டும் ஒருமுனையில் நங்கூரம் போல் நிலைத்து நின்று நம்பிக்கை அளித்தார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா சதம் அடித்து அசத்தினர். புஜாரா அடித்த 16-வது சதம் இதுவாகும். மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்ததால், கடைசி நேரத்தில் சற்று அடித்து ஆடிய புஜாரா 123 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில், துரதிருஷ்டவசமாக ரன் ஆவுட் ஆகி வெளியேறினார். இந்தியா 87.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் அடித்து இருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. களத்தில், சமியும் ஜஸ்பிரித் பும்ராவும் நின்றனர்.

இந்த நிலையில், 2 ஆம் நாள் ஆட்டம் துவங்கியதும் வீசப்பட்ட முதல் பந்திலேயே முகம்மது சமி ஆட்டமிழந்தார். இதன்படி இந்திய அணியின் முதல் இன்னிங்சும் 250 ரன்களோடு முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், நாதன் லயன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை துவங்கி விளையாடி வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.