Breaking News
பிரதமர் அலுவலகத்தின் மக்கள் தொடர்பு துறை அதிகாரி மறைவு; பிரதமர் மோடி இரங்கல்

பிரதமர் அலுவலகத்தின் மக்கள் தொடர்பு துறை அதிகாரியாக பணியாற்றியவர் ஜெகதீஷ் தக்கார். மூத்த பத்திரிகையாளரான இவர் காலமானார்.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியொன்றில், ஜெகதீஷ்பாய் ஒரு மூத்த பத்திரிகையாளர். குஜராத் மற்றும் டெல்லி என இரண்டு இடங்களிலும் நான் அவருடன் பல வருடங்கள் மகிழ்ச்சியுடன் பணியாற்றி உள்ளேன்.

அவரது எளிமை மற்றும் நல்ல மனம் படைத்தவர் என்பதற்காக அறியப்படுபவர். அவரது மறைவு அதிக வருத்தத்தினை தருகிறது என தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.