Breaking News
என் குடும்பத்த சுக்குநூறாக்கிட்டாங்க!!! தாடிபாலாஜி வேதனை

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் ஒருவரான தாடி பாலாஜி குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் தலைவிரித்தாடுகிறது.

தங்கள் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை பாலாஜியும் மனைவி நித்தியாவும் வெளிப்படையாக ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றங்களை சுமத்தி வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது மீண்டும் நடிகர் தாடி பாலாஜி செய்தியாளர் சந்திப்பில் தன் மனைவி நித்யா மீது தடாலடியாக குற்றத்தை சுமத்தியுள்ளார். அதாவது, தமது மனைவி நித்யா காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் என்பவருடன் சேர்ந்துகொண்டு குழந்தையின் வாழ்க்கையை சீரழிப்பதாகவும், மனோஜ் மீது போலீசில் புகார் கொடுத்ததன் பேரில் மனோஜ்குமார் சென்னையில் இருந்து திருச்சிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மனோஜ்குமாருக்கு இந்த தண்டனை எல்லாம் போதாது. என் குடும்பத்தை சீரழித்த அவர்மீது இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நித்யா உடனான பிரச்சனையை கோர்ட்டில் தீர்த்துக்கொள்வேன்.

நான் குடிகாரன், கொடுமைகாரன் என பழிசுமத்துகிறார்கள். என் மீது வேண்டுமென்றே குற்றம் சுமத்தப்படுகிறது என்பதை மக்கள் தற்போது உணர்ந்திருக்கிறார்கள். என்னை கெடுக்க நினைத்தால் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என தாடி பாலாஜி ஆவேசமாக பேசினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.