Breaking News
பல்பு வாங்கியதை சமாளிக்க கஸ்தூரி செய்த வேலை!! விடாமல் துரத்தும் நெட்டிசன்கள்

ஜுலை காற்றில் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

அப்போது கார்த்தியுடன் செல்பி எடுக்க நடிகை கஸ்தூரி முயற்சி செய்து பின் கார்த்தியிடம் வாங்கி கட்டிக்கொண்டார். செல்பி எடுப்பதில் விவஸ்தையே இல்லாமல் போச்சு. அனுமதி இல்லாமல் செல்பி எடுக்கிறார்கள். முன்னாடி இரண்டு பிளாஷ், பின்னாடி இரண்டு பிளாஷ் என அடித்தால் மைக்ரான் இருப்பவர் என்ன ஆவார் என கேள்வி எழுப்பினார்.

தான் பல்பு வாங்கியதை சமாளிக்க நடிகை கஸ்தூரி “ஜூலை காற்றில்” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏதாவது வைரல் விஷயம் வேண்டும் என்று செய்தது ஒர்க் அவுட் ஆயிருச்சு. இதை நம்பி கொந்தளிக்கிற எமோஷனல் நபர்கள் கண்டிப்பாக ஜூலை காற்றில் படத்தை என்ஜாய் பண்ணுவீங்க’ என்று கூறி சமாளித்தார்.

இதையும் விடாத நெட்டிசன்கள் அவரது சமாளிஃபிகேகஷனை கிண்டலடித்து வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.