Breaking News
ஜெ.,யின் ஆன்மாவிற்கு பயந்தவர்கள் நாங்கள்!: ஓ.பி.எஸ்

மாமன் மச்சான் சண்டைக்காக, ஒரு நாளிதழில் பணியாற்றிய அப்பாவியான, மூன்று பேரை எரித்துக் கொன்று, வன்முறை கலாசாரத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்த கட்சி தி.மு.க., அவர்களின் ஆட்சியில், அடுத்தவர்களின் சொத்துகளை, தங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்வர். அதை அவர்களிடமிருந்து மீட்டு, உரியவர்களிடம் திரும்பக் கொடுத்த கட்சிதான் அ.தி.மு.க.,

தி.மு.க.., ஆட்சிக்கு வந்தால், அடுத்தவங்க சொத்தை அபகரிச்சுடுவாங்க. சாப்பிட்ட பிரியாணிக்கும், புரோட்டாவுக்கும் காசு கேட்டால், ஓட்டல்காரர்களுக்கு குத்து விடும் கட்சி தி.மு.க., பெண்களை, கோவில் அருகே பூக்கடை கூட, நடத்த விட மாட்டார்கள். நாங்கள், ஜெ.,வின் ஆன்மாவிற்கு பயந்து, மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.- துணை முதல்வர் பன்னீர்செல்வம், சாத்துாரில்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.