Breaking News
ஆசிய பேட்மிண்டன்: சாய்னா, சிந்து சாதிப்பார்களா?

39-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் யுஹான் நகரில் நேற்று தொடங்கியது. வருகிற 28-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் சாய்னா நேவால், பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், சமீர் வர்மா உள்ளிட்ட இந்தியர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஆசிய பேட்மிண்டன் போட்டியில் 1965-ம் ஆண்டில் இந்தியாவின் தினேஷ் கண்ணா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அதன் பிறகு இந்தியர்கள் யாரும் இங்கு மகுடம் சூடியதில்லை. 54 ஆண்டுகால அந்த ஏக்கத்தை சாய்னா, சிந்து தணிப்பார்களா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இந்த போட்டியில் 3 முறை வெண்கலப்பதக்கம் வென்றுள்ள சாய்னா தனது முதல் சுற்றில் ஹான் யுவை (சீனா) இன்று சந்திக்கிறார். பி.வி.சிந்து முதல் சவாலை சயாகா தகாஹஷியுடன் (ஜப்பான்) தொடங்குகிறார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.