Breaking News
எல்லைக்குள் பறந்த ரஷ்ய குண்டு வீசும் விமானங்களை இடைமறித்த அமெரிக்கா

கடந்த திங்கள்கிழமை அன்று அமெரிக்காவின் அலாஸ்கா மாகாண வான்பரப்புக்கு அருகே ரஷ்யாவின் 6 போர் விமானங்கள் பறந்ததாக அமெரிக்காவின் வடக்கு வான் பாதுகாப்பு கட்டளையகம் தெரிவித்துள்ளது. அந்த 6 போர் விமானங்களில், குண்டு வீசும் திறன் கொண்ட டியூ-95 மற்றும் சுகோய் 35 ரக போர் விமானங்களும் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

அவற்றை, தங்கள் நாட்டின் எப்-22 விமானங்கள் மூலம் இடைமறித்து திருப்பி அனுப்பியதாகவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. அச்சுறுத்தலை கண்டுபிடிக்கவும் முறியடிக்கவும் 365 நாட்களும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.