Breaking News
பஞ்சாப்பில் 110 மணிநேர போராட்டத்திற்கு பின் ஆழ்துளை கிணற்றில் இருந்து சிறுவன் மீட்பு

பஞ்சாப்பின் சாங்ரூர் நகரில் பகவான்புரா கிராமத்தில் கடந்த வியாழ கிழமை தனது வீடு ஒன்றின் அருகில் பதேவீர் என்ற 2 வயது சிறுவன் விளையாடி கொண்டிருந்துள்ளான். அந்த வீடு அருகே ஆழ்துளை கிணறு ஒன்று துணியால் முடி வைக்கப்பட்டு இருந்தது.

சிறுவன் மெல்ல நடந்து சென்றபொழுது தவறி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விட்டான். இது அறிந்த அவனது தாய் சிறுவனை மீட்க முயன்று முடியாமல் போனது. தொடர்ந்து மீட்பு குழுவினர் உடனடியாக அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அவனுக்கு உணவோ அல்லது தண்ணீரோ கொடுக்க முடியாத சூழ்நிலையில் பிராணவாயு அளிக்கப்பட்டு வந்தது. ஆழ்துளை கிணற்றின் அருகே மற்றொரு குழி தோண்டப்பட்டு மீட்பு பணி தொடர்ந்தது. 110 மணிநேர போராட்டத்திற்கு பின் ஆழ்துளை கிணற்றில் இருந்து இன்று காலை சிறுவன் மீட்கப்பட்டான்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.