Breaking News
இரவு 8:00 மணிக்கு ‘டாஸ்மாக்’ மூட உத்தரவு

வழிப்பறி அச்சுறுத்தல் உள்ள இடங்களில், ‘டாஸ்மாக்’ மதுக் கடைகளை இரவு, 8:00 மணிக்குள் மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

‘டாஸ்மாக்’ கடைகள், பகல், 12:00 முதல், இரவு, 10:00 மணி வரை, செயல்படுகின்றன. ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில், இரவு, 10:00 மணிக்கு கடையை மூடி, பணத்துடன், விற்பனையாளர்கள் செல்கின்றனர்.சில இடங்களில், இவர்களை தாக்கி, மர்ம நபர்கள், பணத்தை வழிப்பறி செய்து விடுகின்றனர். இதை தடுக்க, இதுபோன்ற பகுதிகளில், இரவு, 8:00 மணிக்குள் கடைகளை மூட, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வேலுார் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:வேலுார் மாவட்டத்தில், 150 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில், ஆள் நடமாட்டமின்றி, ஊருக்கு ஒதுக்குப்புறமாக, வழிப்பறி அச்சுறுத்தல் உள்ள இடத்தில், 40 கடைகள் உள்ளன. இங்கு இரவு, 8:00 மணிக்கு மேல், விற்பனை நடப்பதில்லை. இதில், 50 ஆயிரம் ரூபாய் மட்டும் விற்பனையாகும் கடைகள், 10 உள்ளன.இவற்றை இரவு, 8:00 மணிக்கே மூட, உத்தரவிடப்பட்டுள்ளன. இவை மூடப்படுவதால், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நஷ்டம் ஏற்படாது. இந்த கடைகளில், குறைந்த அளவு மதுபானங்கள் இருப்பு வைக்கவும், உத்தரவிடப்பட்டுள்ளன.
இதனால், கடை விற்பனையாளர்கள், குறித்த நேரத்தில், பாதுகாப்பாக, பணத்துடன் வந்து விடுவர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.