Breaking News
சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இன்றும், நாளையும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். இதையொட்டி சென்னை, மாமல்லபுரம் பகுதிகள் முழுவதும் பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, இன்று முற்பகல் 11.10 மணிக்கு, சென்னை வந்தார். டெல்லியிலிருந்து, சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியை, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் , முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் நடைபெறும் வரவேற்பிற்கு பின்னர், அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலம், பிரதமர் நரேந்திர மோடி கோவளம் புறப்பட்டுச் செல்கிறார். கோவளத்திலிருந்து, மாலை மாமல்லபுரம் பயணமாகும் பிரதமர் நரேந்திர மோடி, 5 மணியளவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசுகிறார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.