Breaking News
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் நியூசிலாந்து அணி வீரர்கள் பவுல்ட், லாதம் ஆடுவது சந்தேகம்

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் வருகிற 24-ந் தேதி நடக்கிறது. இதற்கிடையில் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பேட்டிங் செய்கையில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் கையுறையில் தாக்கியது. இதில் அவருக்கு வலது கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை. இதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் லபுஸ்சேன் அடித்த பந்தை கேட்ச் செய்கையில் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான டாம் லாதமுக்கு இடது கை சுண்டு விரலில் காயம் ஏற்பட்டது. ‘எக்ஸ்ரே’ எடுத்து பார்த்ததில் டாம் லாதமுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. காயம் அடைந்த அவர்கள் இருவரும் இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் ஆடுவது சந்தேகமாகி உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.