Breaking News
கள்ளக்குறிச்சியில் கார், அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதல்; 4 பேர் பலி

கள்ளக்குறிச்சியில் உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி-சென்னை சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கார் இறைஞ்சி என்ற இடத்தில் வந்தபொழுது இன்று அதிகாலை அரசு பேருந்து ஒன்று அதன் மீது மோதியது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், காரில் இருந்தவர்கள் கீழே இறங்கி அரசு பேருந்து ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், திருச்சியில் இருந்து சென்னை சென்ற தனியார் பேருந்து கார் மற்றும் அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் 4 பேர் பலியானார்கள். 15 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.