Breaking News
அ.தி.மு.க ஆட்சியில் மழைநீர் வடிகால் அமைப்பதில் பல கோடி ரூபாய் முறைகேடு – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை

சென்னையில் கடந்த 6-ந்தேதி இரவு தொடங்கிய கனமழை விடிய விடிய பெய்து வெள்ளக்காடாக்கியது. ஒரே நாளில் பெய்த மழையால் சென்னை நகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது.

மழைநீர் கால்வாய்கள் நிரம்பி சாலைகளிலும், மழைநீர் சூழ்ந்தது. மணலி, திரு.வி.க.நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

கொரட்டூர், கொளத்தூர் ஜி.கே.எம். காலனி, பூம்புகார் நகர், பெரவலூர், புளியந்தோப்பு, மேற்கு மாம்பலம் ஆகிய முக்கிய பகுதிகளில் தேங்கிய மழைநீரை இன்னும் வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழலும் ஏற்பட்டிருக்கிறது. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்றாம் நாளாக மழை பாதிப்புகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3வது நாளாக தனது ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறார். அதன்படி சென்னை கொளத்தூர் தொகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரடியாக சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதோடு மட்டுமின்றி அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மருத்துவ முகாமையும் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார்.

தயார் செய்து வைக்கப்பட்டிருந்த உணவை ருசித்து பார்த்தார் மு.க.ஸ்டாலின்.

உடன் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் பல உயரதிகாரிகள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

ஸ்டார்ட் சிட்டி திட்டத்தில் கமிஷன் பெற்றுள்ளனர், முறையாக எந்த பணிகளும் நடைபெறவில்லை என குற்றம் சாட்டினார். மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என கூறினார். முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் மழைநீர் வடிகால் அமைப்பதில் பல கோடி ரூபாய் முறைகேடு புகார் எழுந்துள்ளது. தற்போது சமாளித்து பணிகளை மேற்கொண்டு வருவதாகவும்,ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்ததாரர்கள் மீது நிச்சயமாக, உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.