Breaking News
“சென்னையில் வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளை திமுக அரசு சரிவர செய்யவில்லை” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை,

சென்னையில் கடந்த 7 ஆம் தேதி பெய்த கனமழையால் சென்னை வெள்ளக்காடானது. தொடர்ச்சியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கனமழையால், சென்னையில் பிரதான சாலைகளில் தண்ணீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகின்றன. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, வெள்ளம் பாதித்த பகுதிகளை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டார். சென்னை யானைக்கவுனி உள்ளிட்ட பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வெள்ள நீரில் இறங்கி ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண பொருட்களையும் வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “சென்னையில் வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளை திமுக அரசு சரிவர செய்யவில்லை. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அதிகாரிகள் சென்று ஆய்வு செய்யவில்லை. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களுக்கு உணவு,தண்ணீர், மருந்து போன்ற பொருட்கள் கிடைக்கவில்லை” என்று கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.