Breaking News
இந்தியாவில் 9 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு….!

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை முடிவை நெருங்கி வருகிறது. நேற்று முன்தினம் 11 ஆயிரத்து 271 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், இந்த பாதிப்பு கணிசமாக குறைந்து 10 ஆயிரத்து 229 ஆனது. ( அதில் கேரள மாநிலத்தில் மட்டும் 4,547 பேருக்கு பாதிப்பு) ஏற்பட்டுள்ளது).

இந்நிலையில் இந்தியாவில் இன்று மேலும் 8 ஆயிரத்து 865 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8 ஆயிரத்து 865 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,44,56,401 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 197 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,63,852 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.35 % ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 11,926 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,38,49,785 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.27 % ஆக உள்ளது.

மேலும் கடந்த 525 நாட்களில் குறைவான பதிவாக கொரோனா தொற்றுக்கு தற்போது 1,30,793 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 112,97,84,045 கோடி பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 59,75,469 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 11,07,617 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 62,57,74,159 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.