Breaking News
3 வேளாண் சட்டங்கள் வாபஸ் ”அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி” – மு.க.ஸ்டாலின்
சென்னை,
வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 11 மாதங்களுக்கு மேலாக டெல்லி எல்லையில் அரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில்  பிரதமர் மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாகவும் அதை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் முறையாக திரும்பப் பெறப்படும் எனத் அறிவித்தார்.
இந்தநிலையில், இந்த அறிவிப்பை தற்போது அனைத்து தரப்பினரும் வரவேற்று வருகிற நிலையில் தமிழக முதல்-அமைச்சர்  மு.க ஸ்டாலின் , ‘ 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன் எனக்கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
உழவர் பக்கம் நின்று போராடியதும் – வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக திமுக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமைகொள்ளத்தக்கதாகும்!
அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து இந்தியா காந்தியின் மண் என்று உழவர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்!
மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக  பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்!
மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும்; இதுவே வரலாறு சொல்லும் பாடம்! என பதிவிட்டுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.