Breaking News
நொய்டா சர்வதேச விமான நிலையம் – பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலம் ஜீவார் நகரில் நொய்டா சர்வதேச விமான நிலையம் அமைய உள்ளது.

இதுதொடர்பாக, அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், வரும் 2024-ம் ஆண்டில் இந்த விமான நிலையம் செயல்பாட்டிற்கு வரும். உ.பி.யில் 5-வது சர்வதேச விமான நிலையமாக இது இருக்கும். ரூ.34 ஆயிரம் கோடியில் அமையவுள்ள இந்த விமான நிலையம் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரும் என தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை மதியம் 1 மணிக்கு நொய்டாவில் அமையவுள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
ஏற்கனவே, குஷிநகர் சர்வதேச விமான நிலையம் மற்றும் அயோத்தி சர்வதேச விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.