Breaking News
இந்தியாவில் புதிதாக 6,531 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 315 பேர் பலி
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு நேற்றுமுன்தினம் 7 ஆயிரத்து 189 ஆக இருந்தது. இந்த பாதிப்பு நேற்று காலை மீண்டும் 7 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இதன்படி 6 ஆயிரத்து 987 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் நாட்டில் இன்று புதிதாக 6,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. (இதில் கேரளாவில் மட்டும் 1,824 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்).
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6 ஆயிரத்து 531 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,47,93,333 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 315 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,79,997 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 7,141 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,42,37,495 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.40 % ஆக உள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு 75,841 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,41,70,25,654 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 29,93,283 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 7,52,935 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 67,29,36,621 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.