Breaking News
தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு..?
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு குறைந்து வருகிறது. ஆனாலும் 30 ஆயிரம் என்ற அளவில் நாளொன்றுக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது.
தற்போது, தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் கட்டுப்பாடுகள் வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளன. இந்த நிலையில், தொற்றின் நிலையை ஆய்வு செய்யவும், தமிழகத்தில் மேலும் தளர்வுகளை அனுமதிக்கலாமா? என்பது பற்றியும் இன்று மருத்துவ நிபுணர்கள், குழுவுடன்  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது.
முதற்கட்டமாக 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்ட நிலையில், தற்போது 1 முதல் 12 வரை பள்ளிகளை திறப்பது பற்றி முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சிலமணி நேரத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்லூரிகளை பொறுத்தவரை பிப்ரவரி 1 முதல் 20-ஆம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடைபெற இருப்பதால், தேர்வுகள் முடிந்த பிறகு நேரடி வகுப்புகள் நடைபெறுவதற்கும் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிற

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.