Breaking News
உக்ரைனில் இருந்து வங்காளதேசத்தினர் மீட்பு – பிரதமர் மோடிக்கு ஷேக் ஹசினா நன்றி
டாக்கா,
உக்ரைன் மீது ரஷியா இன்று 14-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.
இதனால் உக்ரைன் படைகளுக்கும், ரஷியாவின் படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த போரில் ரஷிய தரப்பில் பாதுகாப்பு படையினர், உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. இந்த முயற்சிகளின் பலனாக உக்ரைனின் சில பகுதிகளில் தற்காலிகமாக சண்டையை நிறுத்துவதாக ரஷியா அறிவித்துள்ளது.
இதற்கிடையில், போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் இந்த மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மீட்பு நடவடிக்கை மூலம் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்த மீட்பு பணியின் போது பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம். போன்ற அண்டை நாடுகளை சேர்ந்தவர்களையும் இந்தியா மீட்டு வருகிறது. அந்த வகையில் வங்காளதேசத்தை சேர்ந்த 9 பேரை உக்ரைனில் இருந்து இந்தியா மீட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் சிக்கித்தவித்த தங்கள் நாட்டினர் 9 பேரை மீட்ட இந்திய அரசுக்கும், இந்திய பிரதமர் மோடிக்கும்  வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா நன்றீ தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.